திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தாங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதை பல ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால் இந்த விஷயத்தில் ரொம்பவே மாறுபட்ட சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவர் பெண்களை மையப்படுத்தி, கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். இது ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும் இதற்கு பின்னணியில் நெகிழவைக்கும் ஒரு காரணமும் இருக்கிறது.
இதுபற்றி அர்ஜூன் ராம்பால் கூறும்போது, “இப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தால் அதை உடனே ஏற்றுக் கொள்கிறேன். அதை என்னுடைய தாய்க்கு செலுத்தும் காணிக்கையாக தருகிறேன். தந்தை இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று என்னை வளர்த்து ஆக்கியவர் என் தாய்” என்று கூறியுள்ளார். இவரது தாய் புற்றுநோய் காரணமாக கடந்த 2018 ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.