'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு போதை ஆசாமிகள் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கண்டன பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மின்சார ரயிலில் புலம் பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்தியுள்ள அரக்கத்தனமான அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித இலக்கு புரியாமலும் இந்த மாதிரி தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த, கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீது சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிசை தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.