சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக நடித்து வரும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரிசெல்வராஜ். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளரான மாரிசெல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதையடுத்து தற்போது உச்சினியென்பது என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.