தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல ஹிந்தி நடிகரான அக்சய் குமாருக்குக் கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் கொரானோவால் பாதிக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக அவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர், “கேன்ஸ் 2022 திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரானோ பாசிட்டிவ் வந்து விட்டது. நான் ஓய்வெடுக்க வேண்டும். அனுராக் தாக்கூர் மற்றும் நமது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். அங்கு இருக்கும் வாய்ப்பைத் தவறிவிடுகிறேன்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அக்சய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.