தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா என்பது குறித்து சமீபத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பால் இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. பல மொழிகள், கலாசாரங்கள், பண்டிகைகள், மதங்கள் என வண்ணமயமான நாடு இந்தியா. நாம் அனைவரும் இங்கு நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்ந்து வருகிறோம். நான் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். ஹிந்தி நமது தேசிய மொழி என நான் கருதுகிறேன். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் ஹிந்தி மொழி அதிகம் பேசப்பட்டும், புரிந்து கொள்ளப்பட்டும் வருகிறது. ஆனால் வேறு எந்த மொழியையும் அது கொண்டு போகவில்லை என தெரிவித்துள்ளார்.