தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், லண்டனில் தலைமறைவாக வாழும் மோசடி தொழில் அதிபர் லலித் மோடியுடன் லிவிங் டூ கெதராக வாழ்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த தகவலை வெளியிட்டதே லலித் மோடிதான்.
இந்த தகவல் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் சுஷ்மிதான சென்னை கிழித்து தொங்க விட்டார்கள். பணத்துக்காக எதையும் செய்வீர்களா? என்பது பிரதான கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் கோபமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எழுதியிருக்கும் சுஷ்மிதா, இந்த பதிவோடு தன் குழந்தைகளோடு இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.