அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடிப்பில் உருவான லால் சிங் சத்தா என்கிற படம் கடந்த வியாழனன்று வெளியானது. இந்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய இடத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். அத்வைத் சந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதற்காக ஹைதராபாத், சென்னை என நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட ஆமிர்கான் கலந்து கொண்டார். தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டார்.
ஆனால் இந்த படம் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆமிர்கான் படத்தை புறக்கணியுங்கள் என்கிற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது.. ஆமிர்கான் இதற்கு முன்னதாக நடித்த பல படங்களில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால், இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படத்திற்கும் கூட எந்த மொழியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது இதை சுட்டிக்காட்டி உள்ள தெலுங்கு திரைகயுலகின் முன்னாள் சீனியர் நடிகை விஜயசாந்தி, ஆமிர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு தோல்வியை பரிசளித்ததற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடுவதற்காக திரையுலக பிரபலங்கள் என்னதான் துணையாக நின்றாலும் மக்கள் இந்த படத்திற்கு தர வேண்டிய சரியான ரிசல்ட்டை கொடுத்துள்ளனர்.. இனிவரும் நாட்களில் ஆமிர்கானை வைத்து படம் எடுக்க இருப்பவர்கள் அவர்களது படத்திற்கு என்ன விதமான ரிசல்ட் கிடைக்கும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.