தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கிங்டம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் 'கிங்டம்'. இந்த படத்தில் இலங்கை தமிழர்களை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தியேட்டர் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை, உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம், ‛‛தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பின்னர், தியேட்டரில் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. அதேசமயம் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் உரிய அனுமதி பெற்று செய்ய வேண்டும். அதுவும் ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும்'' என தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்த நிலையில், சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஆகவே கிங்டம் படம் திரையிட்டுள்ள தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.