2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

தெலுங்கில் வெளியாகி பாலிவுட்டுக்கு செல்லும் படமாகட்டும், பாலிவுட்டில் வெளியாகி தென்னிந்தியாவில் வெளியாகும் படமாகட்டும், இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் மற்றவர்களின் மனம் கோணாமல் அவர்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்காக சென்னைக்கு வந்த ரன்பீர் கபூர் நாகார்ஜுனா ஆகியோருடன் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த மூவருக்கும் தலைவாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வடநாட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் நம் உணவு வகைகளை ரொம்பவே ரசித்து சாப்பிட்டாராம்.