கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

பாலிவுட்டில் இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். கல்யாண வீடுகளில் தவறாமல் வாழை மரம் கட்டுவது போல பாலிவுட்டின் முக்கிய சினிமா நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெற்று வருபவர் தான் கரண் ஜோஹர். அதுமட்டுமல்ல மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது இவர் நடத்தி வரும் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தவறாமல் கலந்து கொள்வதும் வழக்கம்.
இந்த நிலையில் காபி வித் கரண் சீசன்-7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கரண் ஜோஹர், “சமீபத்தில் விக்கி கவுஷல், கத்ரினா கைப் திருமணம் நடைபெற்றபோது எனக்கு அழைப்பு அனுப்பவில்லை.. சமீப காலமாகவே பாலிவுட்டில் நடைபெறும் சில திருமண நிகழ்வுகளில் எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. இதோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் கூட அதுபற்றி இங்கே எதையும் பேசவில்லை” என அங்கே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சில நட்சத்திரங்களைப் பார்த்து தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார் கரண் ஜோஹர். மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பவில்லை என்பதை கேட்ட பின்னரே என் மனம் கொஞ்சம் அமைதியானது என்றும் கூறியுள்ளார் கரண் ஜோஹர்.