முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான 'விக்ரம் வேதா' அதே இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்க ஹிந்தியில், ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது.
படத்தைப் பார்த்த பல விமர்சகர்களும் படத்தை ஆஹா, ஓஹோவெனப் பாராட்டினார். 5க்கு 4 ரேட்டிங் எல்லாம் கொடுத்தார்கள். ஆனாலும், படத்தின் வசூல் விமர்சனங்களின் பாராட்டுக்களுக்கு ஏற்றபடி அமையாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வார இறுதியில் இப்படம் சுமார் 40 கோடி வரை வசூலித்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 11 கோடி, இரண்டாம் நாளில் 13 கோடி, மூன்றாம் நாளில் 15 கோடி வரை வசூலித்துள்ளதாம். இவ்வளவு குறைவான வசூல் இப்படத்திற்குக் கிடைக்கும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். நவராத்திரி பூஜையால் குடும்பத்தினர் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.