படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் 'தேங்க் காட்'. வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. சமீபத்தில் சித்ரகுப்தன் சர்சையை ஏற்படுத்திய படம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அடுத்து கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கும்போது விபத்தில் மரணமடைந்து விடுகிறார். விண்ணுலகம் செல்லும் அவருக்கு சித்ரகுப்தன் வாழ்க்கையை புரிய வைப்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் இந்திரகுமார் இந்த கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்த கதை வாழ்க்கையை புரிய வைத்தது.
எனக்கு போலீஸ் வேடம் என்றதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் உயரம் போலீஸ் கேரக்டருக்கு சரியாக இருக்கும், ஆனால் உடற்கட்டு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு மேல் யோசிக்காமல் இயக்குனரிடம் என்னை ஒப்படைத்து விட்டேன். அவர் என்னை திரையில் அற்புதமாக உருவாக்கினார். இப்போது இதுபோன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.




