தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வடக்கு டில்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போதை ஆசாமிகள் ஓட்டி வந்த காரில் மோதி 20 வயது அஞ்சலி சிங் பலியானார். இந்த விபத்து கொடூர விபத்தாக மாறியது. மோதிய வேகத்தில் காரின் அடியில் சிக்கிய அஞ்சலி தேவியை 16 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றிருக்கிறார்கள். உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் அஞ்சலி சிங். சம்பந்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொடூர விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சலியின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்திருக்கிறது. இப்போது அவரது குடும்பம் நிர்கதியாகி உள்ளது. இந்த நிலையில் அஞ்சலி சிங் பற்றி கேள்விப்பட்ட ஷாருக்கான் அவரது குடும்பத்திற்கு கணிசமான நிதி உதவி அளித்துள்ளார். ஷாருக்கான் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியை வழங்கி உள்ளார். எவ்வளவு நிதி என்பதை அவர் அறிவிக்கவில்லை. ஷாருக்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.