வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியானாலும் கூட, ஆயிரம் கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி கட்டியிருந்த அதிநவீன கலாச்சார மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டு தூதரான இம்மானுவேல் லெனனனும் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்வில் ஷாருக்கானை சந்தித்து பேசிய அவர் பிரான்ஸ் நாட்டில் ஷாருக் கான் தனது படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோளும் வைத்துள்ளார். இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இம்மானுவேல் லெனன், “ஷாருக்கானை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். மீண்டும் அவரை பிரான்சில் வந்து படப்பிடிப்பு நடத்துங்கள் என கூறி கன்வின்ஸ் செய்ய முயற்சித்தேன். பிரான்சில் உள்ள மக்கள் பாலிவுட்டில் உள்ளவர்களை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் படப்பிடிப்பு நடத்த அழைத்ததிலும் ஷாருக்கானை கன்வின்ஸ் செய்ய முயற்சித்தேன் என்று அவர் கூறியதிலும் இருந்து, இதற்கு முன்பு ஷாருக்கான் பிரான்சில் படப்பிடிப்பு நடத்த சென்ற சமயத்தில் ஏதோ சங்கடங்களை சந்தித்திருக்கிறார் என்பதையும் அதனால் அவரது சமீபத்திய படங்களின் படப்ப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்திருந்தாலும் பிரான்ஸை அவர் தவிர்த்து வருகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.