மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சோட், கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார். அதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்தி பேட்டை மாவட்டத்தில் ஆதிவாசி கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கோயில் கட்டி அதில் அவருடைய சிலையை வைத்திருக்கிறார்கள். அந்த மக்கள் தனக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று தனக்காக கட்டியுள்ள கோவிலை பார்ப்பதற்காக சோனு சூட் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்துடன் அழைத்து சென்றார்கள். அங்குள்ள செல்பிதாண்டா என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலுக்குள் சென்று தனது சிலையை பார்த்து நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். அதோடு நான் கடவுள் இல்லை, உங்களை போன்று ஒரு மனிதன் தான். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்து தர நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களது அன்புக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.