'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் வீட்டை இரண்டு புகைப்பட கலைஞர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து ரகசியமாக படம் எடுத்துள்ளனர். இதை ஆலியா பட் கவனித்து விட்டார். பின்னர் அவர்கள் எடுத்த படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அப்போது, எதிர் வீட்டின் மேல்மாடியை பார்த்த போது, அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற செயல்களால் எனது தனி உரிமை பாதிக்கப்படுகிறது.
எந்த உலகில் இதுபோன்ற செயல்கள் அனுமதிக்கப்படுகிறது. ஒருவரின் தனியுரிமை மீதான அத்துமீறல்கள் அதன் எல்லைக் கோடுகளை கடந்துவிட்டன. என எழுதியிருந்தார். அதோடு இந்த பதிவை மும்பை போலீசுக்கு டேக் செய்திருந்தார்.
ஆலியாவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆலியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அனுஷ்கா சர்மா, நீது கபூர், ஜான்வி கபூர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் ஆலியாவுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.