பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளை(பிப்., 24) வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அக்ஷய். அதாவது மூன்று நிமிடத்தில் 184 செல்பி எடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அக்ஷய் கூறுகையில், ‛‛இந்த தருணம் வரை நான் இதுவரை சாதித்த அனைத்து விஷயங்களிலும், எல்லா இடங்களிலும் என் உடன் இருப்பது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவே காரணம். இது அவர்களுக்கான என் சிறப்பு பரிசு. அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.