ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல பெண்களின் அழகு சாதன பொருட்களுக்காக '9 ஸ்கின்' என்கிற ஒரு சரும பராமரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக லேட்டஸ்ட்டாக 'ஸ்கின்ட்ரெல்லா' என்கிற ஒரு புராடக்ட்-ஐ சமீபத்தில் மும்பையில் விழா ஒன்றை நடத்தி அறிமுகப்படுத்தினார் நயன்தாரா.
இந்த நிகழ்வின் போது கீழே நின்ற மூன்று பெண்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பி அதே சமயம் தயக்கத்துடன் நிற்பதை கவனித்த நயன்தாரா உடனடியாக விழா ஏற்பாட்டாளர் ஒருவரை அழைத்து அவர்கள் மூவரையும் கைகாட்டி மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அப்படி வந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார் நயன்தாரா. இப்படி நயன்தாரா தங்களைக் கவனித்து மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுப்பார் என எதிர்பாராத இந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.