படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல பெண்களின் அழகு சாதன பொருட்களுக்காக '9 ஸ்கின்' என்கிற ஒரு சரும பராமரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக லேட்டஸ்ட்டாக 'ஸ்கின்ட்ரெல்லா' என்கிற ஒரு புராடக்ட்-ஐ சமீபத்தில் மும்பையில் விழா ஒன்றை நடத்தி அறிமுகப்படுத்தினார் நயன்தாரா.
இந்த நிகழ்வின் போது கீழே நின்ற மூன்று பெண்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பி அதே சமயம் தயக்கத்துடன் நிற்பதை கவனித்த நயன்தாரா உடனடியாக விழா ஏற்பாட்டாளர் ஒருவரை அழைத்து அவர்கள் மூவரையும் கைகாட்டி மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அப்படி வந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார் நயன்தாரா. இப்படி நயன்தாரா தங்களைக் கவனித்து மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுப்பார் என எதிர்பாராத இந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.