படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது 'பீனிக்ஸ் வீழான்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விடுதலை-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் எனது தந்தை தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுக்கிறார். அது எனது செலவுக்கே போதவில்லை. அதனால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகர் மகன் ஏன் நடிகராக வேண்டும்? வேறு தொழில் செய்யக்கூடாதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகர் மகன் மட்டும் ஏன் நடிகராக கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கும் சூர்யா சேதுபதி, நடிகரின் மகன் என்பதால் சான்ஸ் மட்டும்தான் கிடைக்கும். கடினமாக உழைத்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். அதனால் பீனிக்ஸ் வீழான் படத்தில் கடினமான நடிப்பை கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.