ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் தற்போது மினிமம் கியாரண்டி ஹீரோவாக, தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள நடிகராகவும் இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வது தான் தன்னை நீண்ட காலம் திரையுலகில் பயணிக்க வைக்கும் என்பதை உணர்ந்து, தொடர்ந்து அதுபோன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். கடந்த 2012ல் 'பிரபுவின்டே மக்கள்' என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான அவர், அடுத்த வருடம் சல்மான் நடித்த 'ஏபிசிடி' படத்தில் வில்லனாக ஒரு இளம் அரசியல்வாதியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு தெரிந்த முகமாக மாறினார். அதன் பிறகு மாய நதி, மின்னல் முரளி என தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி தற்போது முன்னணி நடிகர் வரிசைக்கு உயர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது 12 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இது குறித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் விதமாக, சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள டொவினோ தாமஸ், “12 வருடங்களில் 50 படங்கள்.. என் மனம் பெருமிதத்தால் நிரம்பி வழிகிறது.. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என இத்தனை வருடங்களில் நான் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக நான் வளர்ந்து வந்த நடிகராக இருந்த காலகட்டத்திலும் சரி இப்போது இருக்கும் நிலையிலும் சரி எனக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து என்னை பிரமிக்க வைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இங்கே நான் எதையும் செய்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.