தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1998ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அங்கு 'சிங்காரா' என்ற அரிய வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 22ம் தேதி இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே உடல்நலக்குறைவு, கொலை மிரட்டல் பிரச்னைகளுக்கு இடையில் இந்த வழக்கு சல்மானுக்கு மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.




