மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெயரில் படம் எடுப்பதாகவும், அதற்கு நிதி உதவியாளர்களை அழைத்தும், நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சல்மான்கான் கவனத்துக்கு கொண்டு சென்றதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர், “எனது பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மெயிலும் அனுப்பி மோசடி நடந்து வருகிறது. இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார்.




