ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் புலனாய்வு திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் திரைப்படம் பாரன்சிக் துறை அடிப்படையிலான புலனாய்வு கிரைம் திரில்லர் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தை இயக்குனர்கள் அனாஸ்கான் மற்றும் அகில்பால் என்கிற இரட்டையர்கள் இயக்கியிருந்தனர். அந்த வெற்றியை தொடர்ந்து அவர்கள் மீண்டும் நடிகர் தாமஸை வைத்து தற்போது ஐடென்டிடி என்கிற படத்தை இயக்கி வருகின்றனர்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் வினய் ராய் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் நோக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சாட்சிகள் சொல்லும் அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை வரையும் ஓவியராக காவல்துறையில் பணியாற்றும் நபராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். அப்படி திரிஷா சொல்லும் அடையாளங்களுடன் ஒருவரை அவர் வரைவதாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டீசரை பார்த்து விட்டு நடிகர் கார்த்தி, “மிகவும் உற்சாகமாக இருக்கிறது. குட் லக்” என்று தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் டொவினோ தாமஸ் உள்ளிட்ட ஐடென்டிடி படக்குழுவினருக்கு அங்கு தெரிவித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸும் கார்த்திக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.