ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று மிக பெரிய அளவில் வெளியானது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் அதையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை முதல் பாகத்தின் வெற்றி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டில் கூட இந்த படம் தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ் படங்களே கூட இந்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டதும் ஆச்சரியம்தான்.
இந்த படம் 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜதாரா என்கிற ஒரு நடனம் அதற்காக அல்லு அர்ஜுன் சேலை அணிந்தபடி ஒரு பெண் சாமியார் போல நடனமாடுவதும் அதன் பிறகு எதிரிகளை துவம்சம் செய்வதும் என கிட்டத்தட்ட 19 நிமிட நீளமான காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரபு நாடுகளில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட போது இது மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளால் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 19 நிமிட காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டு தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.