ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். வித்தியாசமான கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவரது படங்களுக்கென ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் அஜயண்டே இரண்டாம் மோசனம் என்கிற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கியுள்ள இந்த படம் மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாகியிருந்தது.
இதில் மூன்று கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இதில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதன் வெற்றி வெளியான அன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இந்த படம் இணைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஒரு போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.