இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 2018ம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி நடித்து வெளிவந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தால் தான் மாரி செல்வராஜ், தனுஷை வைத்து கர்ணன் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் இந்த படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலை நடக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாராம். இதில் சித்தார்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி திமிரி ஆகியோர் நாயகன், நாயகியராக நடிக்க உள்ளனர். என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டுள்ளாராம் கரண் ஜோஹர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.