இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம் தமிழ், இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக பூஜா ஹெட்டே நடிக்கிறார். இதற்கு முன்பு ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான பிளடி டாடி என்கிற படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம் ஷாகித் கபூர்.
ஆனால் தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்திற்காக 15 கோடி குறைத்துக் கொண்டு வெறும் 25 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டாராம் ஷாகித். அதற்கு காரணம் இது குறுகிய கால தயாரிப்பாக உருவாவதாலும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் மீது ஷாகித் கொண்டிருந்த மரியாதையாலும் தான் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.