படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட் நடிகை கங்கனா தனது துணிச்சல் மிகுந்த பேச்சால் ஹிந்தி திரையுலகிலும் சரி, மகாராஷ்டிரா அரசியலிலும் சரி மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் எம்.பியும் , அரசியல்வாதியுமான சுப்பிரமணிய சுவாமி, கங்கனா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கிண்டலாக விமர்சித்துள்ளார். அப்படி இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக பதில் கொடுத்துள்ளார் கங்கனா.
இது குறித்து கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "நான் வெறும் நடிகை மட்டும் அல்ல. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. அதுமட்டுமல்ல விரைவில் வெளியாக இருக்கும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளேன். மகாராஷ்டிராவில் தேசியவாதிகள் அரசு அமைய வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மேலும் நான் தக்தே கும்பலை பற்றியும், காலிஸ்தான் அமைப்புகளை பற்றியும் கடுமையாக கண்டித்தேன். தற்போது உள்ள மலிவான அரசியல்வாதிகள் பலர் என்னை டார்கெட் செய்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதற்காகத்தான் எனக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.




