தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கூமர்'. முன்னதாக ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ‛‛சமூகம், கலாச்சாரம் எல்லாம் மாறி வருகின்றன. இன்றைய காலத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவே. என்னால் என் பெற்றோரை விட்டு தனியாக வாழ்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த வயதில் பெற்றோரை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். கடவுள் அருளால் என் பெற்றோர் இன்னும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக உள்ளனர். கூட்டு குடும்பம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். ஒருவேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, சிரித்து பேசி மகிழ வேண்டும். 47 வயதில் நான் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம்'' என்றார்.