தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீபத்தில் பாலிவுட்டில் கடார் 2 என்கிற படம் வெளியானது. சன்னி தியோல், அமிஷா படேல் நடித்திருந்த இந்த படத்தை அனில் சர்மா என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று தற்போது 500 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்துடன் அக்ஷய் குமாரின் ஓஎம்ஜி 2, ரஜினிகாந்த்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் இந்த படம் அந்த போட்டியிலும் எதிர்நீச்சல் போட்டு அபரிமிதமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில் கடார் 2 படக்குழுவினர் இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டியை வெகு விமர்சையாக கொண்டாடினர். இதில் பாலிவுட்டில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ரொம்பவே அரிதாக பாலிவுட்டின் மும்மூர்த்திகளான ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகிய மூவருமே இந்த சக்சஸ் பார்ட்டியில் நீண்ட நாளைக்கு பிறகு ஒன்றாக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.