இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மும்பை : மகாதேவ் ஆன்லைன் சூதாட்டம் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அக்., 6க்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
வட மாநிலங்களில் மகாதேவ் ஆப் என்ற ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பேர் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல நூறு கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்து, அதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணைக்காக அவர் அக்., 6க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.