தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
துபாயை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு சூதாட்ட ஆப் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றி உள்ளது. இந்த செயலியை விளம்பர படுத்துவதற்காக பாலிவுட் நடிகர், நடிகைகள் கோடி கணக்கில பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவத்தற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அதேபோன்று நேற்று பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.