இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகைகள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. ஷபனா ஆஷ்மி, ஹேமமாலினி, ஜெயப்ரதா என நிறைய இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித் அரசியலுக்கு வர இருப்பாகவும், வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாகவும் தகவல் வெளியானது. மும்பை, வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் மாதுரியும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனேயும், மாநில பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலருடன் கலந்து கொண்டனர். இதற்கு பிறகு இந்த தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தது.
ஆனால் இதனை மாதுரி மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “நான் அரசியலில் நுழைய இருக்கிறேன் எனத் தகவல் வந்து கொண்டிருப்பது குறித்து நான் அறிவேன். ஆனால், அவை எல்லாம் வெறும் வதந்திதான். நான் எந்தக் கட்சியிலும் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” எனக் கூறியுள்ளார் மாதுரி.