இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படம் 'பைட்டர்'. அனில் கபூர், அக்ஷய் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். வயாகாம் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படம் வெற்றி பெறுவதற்காக தீபிகா படுகோனே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதையில் உள்ள நடைபாதையில் பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். பக்தர்களுடன் இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். வழிநெடுக படி பூஜையும் செய்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகாபடுகோனேவுடன் செல்பி எடுத்து கொண்டனர். திருமலை சென்று அடைந்ததும் அங்குள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில தங்கினார் பின்னர் நேற்று அதிகாலையில் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.