பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சமீப நாட்களாக விமான பயணங்களில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து திரையரங்க பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு விமான பயணம் அல்ல, அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவமே மிகப்பெரிய கசப்பணர்வை கொடுத்துள்ளது. தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே, சமீபத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்வதற்காக வந்தார் ராதிகா ஆப்தே,
அதே சமயம் விமான நிலைய ஊழியர்கள் சிலர் விமான நடை மேம்பாலத்தில் ராதிகா ஆப்தே உள்ளிட்ட இன்னும் பல பயணிகளை அமரும்படி வற்புறுத்தி இரண்டு பக்க கதவுகளையும் அடைத்து விட்டனர். 8:30 மணிக்கு கிளம்ப வேண்டிய அவரது விமானம் 10:30 மணியாகியும் கிளம்புகின்ற அறிகுறியும் தெரியவில்லை. அதற்கு காரணங்களும் சொல்லப்படாமல் நடை மேம்பாலத்திலேயே கிட்டத்தட்ட சிறைபிடிக்க பட்டது போன்று ராதிகா ஆப்தேவும் இன்னும் சில பயணிகளும் அடைத்து வைக்கப்பட்டனர்.
விமான நிலைய ஊழியர்களும் அது குறித்த தெளிவான தகவலை தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா ஆப்தே நிச்சயம் இது வேடிக்கையான அனுபவம் தான் என்று விரக்தியுடன் கூறியுள்ளார். அதன் பிறகு நிலைமை சீராகி விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே.