ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா (மேனன்). கடந்த வருடம் வெளியான 'வாத்தி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததுடன், அந்தப்படத்தில் ஹிட்டான 'அடியாத்தி இது என்ன' என்கிற ஒரே பாடலில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். அதுமட்டுமல்ல தனது பெயரில் உள்ள மேனன் என்கிற ஜாதி பெயரை தான் நீக்கி விட்டதாகவும் தன்னை சம்யுக்தா என்றே அழையுங்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தெலுங்கில் அவருக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் சம்யுக்தா. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சரண் தேஜ் என்கிற இயக்குனர் ஹிந்தியில் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சம்யுக்தா. இந்த படத்தில் தான் 27 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவாவும் கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.