ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், மாண்டி தொகுதியில் எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ரணாவத்தை ஒரு பெண் சிஐஎஸ்எப் அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தான் நலமாக உள்ளதாக கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காத பாலிவுட் மீது கங்கனா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவிட்டிருந்தார். ஆனால், அதை பின்னர் டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும் அவரது பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பலர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
கங்கனா தாக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டுமே கங்கனா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.