ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் என் மரணம் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவரது ரசிகர்கள் துடிதுடித்து போய் இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்கிற ரேன்ஞ்சில் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கானிடம், 'நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், “நிச்சயமாக. நான் மரணம் அடையும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 'ஆக்ஷன்', 'கட்' என்ற சொற்கள் சாகும்வரை எனக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நான் இறப்பது போல் நடிக்கும் காட்சியில் இயக்குனர் 'ஆக்ஷன்' என்று சொல்ல வேண்டும். நான் இறப்பது போன்று நடிப்பேன். இயக்குனர் 'கட்' என்று சொன்ன பிறகு நான் எழுந்திருக்க கூடாது. நிஜமாகவே இறந்திருக்க வேண்டும். உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை நான் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது எனது வாழ்நாள் கனவு” என்று கூறியிருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பதில் அனைவரையுமே நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.