படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் என் மரணம் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவரது ரசிகர்கள் துடிதுடித்து போய் இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்கிற ரேன்ஞ்சில் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கானிடம், 'நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், “நிச்சயமாக. நான் மரணம் அடையும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 'ஆக்ஷன்', 'கட்' என்ற சொற்கள் சாகும்வரை எனக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நான் இறப்பது போல் நடிக்கும் காட்சியில் இயக்குனர் 'ஆக்ஷன்' என்று சொல்ல வேண்டும். நான் இறப்பது போன்று நடிப்பேன். இயக்குனர் 'கட்' என்று சொன்ன பிறகு நான் எழுந்திருக்க கூடாது. நிஜமாகவே இறந்திருக்க வேண்டும். உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை நான் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது எனது வாழ்நாள் கனவு” என்று கூறியிருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பதில் அனைவரையுமே நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.




