தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமான 'மகாராஜ்' படம் கடந்த ஜனவரியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜ் வழக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் கிஷோரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய்தீப் அலாவத் இடம் பாத சேவைக்காக செல்லும் ஷாலினி பாண்டே மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சையான காட்சியில் நடித்தது பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காத ஷாலினி பாண்டே, முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க முயற்சித்தேன். அதனாலேயே அந்த காட்சிப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. முடிந்தளவு வேகமாகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது. காட்சியில் நடித்தபிறகே நெருடலாக இருப்பதை உணர்ந்தேன். சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, 'இப்போ என்ன நடந்துச்சு' என எண்ணினேன்; அதுதான் யதார்த்தம். படம் வெளியான பிறகே ரொம்ப நெருடலாக உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.




