'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமான 'மகாராஜ்' படம் கடந்த ஜனவரியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜ் வழக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் கிஷோரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய்தீப் அலாவத் இடம் பாத சேவைக்காக செல்லும் ஷாலினி பாண்டே மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சையான காட்சியில் நடித்தது பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காத ஷாலினி பாண்டே, முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க முயற்சித்தேன். அதனாலேயே அந்த காட்சிப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. முடிந்தளவு வேகமாகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது. காட்சியில் நடித்தபிறகே நெருடலாக இருப்பதை உணர்ந்தேன். சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, 'இப்போ என்ன நடந்துச்சு' என எண்ணினேன்; அதுதான் யதார்த்தம். படம் வெளியான பிறகே ரொம்ப நெருடலாக உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.