பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அமீர் கான், 'சித்தாரே ஜமீன் பர்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‛கூலி' படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளார். சித்தாரே ஜமீன் பர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "எனது இளம் வயதில் புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நான் இரவு முழுவதும் கூட மது அருந்தி இருக்கிறேன். அது நல்லதுக்கு அல்ல என எனக்கு தெரிந்தும் கூட என்னால் அப்போது மது பழக்கத்தை கைவிட முடியவில்லை. ஆனால், இப்போது மது அருந்தும் பழக்கத்தை முழுவதுமாக கைவிட்டேன்" என அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அமீர் கான்.




