இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒவ்வொரு ஆண்டு பாலிவுட்டில் உள்ள திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மகா ஆரோக்யா கேம்ப் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் நடிகை பூனம் தில்லான், நடிகர்கள் தீபக் பிரசார், விந்து தாரா சிங், தீரஜ் குமார், இசையமைப்பாளர் திலீப் சென், பாடகி மதுஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடிகர் தீரஜ் குமார் கூறுகையில் ‛‛டாக்டர் தர்மேந்திர குமார் தனியாக இதை துவங்கினார். பின்னர் அவருக்கு நாங்கள் எல்லாம் துணை நின்றோம். இது திரையுலகினருக்கான ஒரு வரலாற்று முன்னெடுப்பு. ஜன., 19ல் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுங்கள்'' என்றார்.
டாக்டர் தர்மேந்திர குமார் கூறுகையில், ‛‛இந்த ஆண்டு முகாமுக்கு ரூ.4 கோடிக்கு மேல் மருந்துகளை கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நோய்க்கும் பல மருத்துவர்கள் இங்கு வருவார்கள். இம்முறை பெண்களுக்கும் பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.