‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீப நாட்களாகவே மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான மரியூபன்ச் சவு என்கிற நடனத்தை கற்றுக் கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரபல நடந்த கலைஞரான விக்கி பார்தியா தான் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த நடனத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்கி பார்த்தியா. இது குறித்து அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவுடன் பணி புரிந்தது உண்மையிலேயே சிறப்பான அனுபவம். அவர் ரொம்பவே துறுதுறுப்பான, வேடிக்கையான, பலமான, தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் அன்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபர். நடன ஒத்திகையின் போதும் படப்பிடிப்பில் நடன காட்சிகளை படமாக்கும் போதும் அவருடைய எனர்ஜியை பார்க்கும் போது நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது. தன்னுடைய அனைத்து விதமான கடின உழைப்பையும் அவர் கொடுத்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.