பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமான சாரா அர்ஜுன், அதன்பிறகு சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். துரந்தர் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றபோது, அந்த மேடையில் சாரா அர்ஜுனும் , நடிகர் ராகேஷ் பேடியும் வணக்கம் தெரிவித்தபடி கட்டிப்பிடித்துக் கொண் டார்கள்.
அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, சாரா அர்ஜுனிடம் ராகேஷ் பேடி தவறாக நடந்து கொண்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நேரத்தில் அது குறித்து நடிகர் ராகேஷ் பேடி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், துரந்தர் படத்தில் சாரா அர்ஜுனின் தந்தையாக நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு தளத்தில் எப்போது என்னை சந்தித்தாலும் இதுபோன்று ஹக் செய்துதான் அவர் வணக்கம் சொல்வார். அதேபோன்றுதான் அப்படத்தின் வெற்றி விழா மேடையிலும் செய்தார். எங்களுக்கிடையே இருப்பது அப்பா - மகள் உறவு தான். அதனால் இதை ரசிகர்கள் தவறான கோணத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.