பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என கொண்டாடப்பட்டவர் மறைந்த கே.பாலசந்தர். ரஜினி, கமல் எனும் இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவிற்கு தந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. கமலின் ஆஸ்தான குருவில் பாலசந்தர் முக்கியமானவர். இயக்குனர் கே பாலசந்தரின் நினைவு தினம் இன்று.
இதையொட்டி நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் பாலச்சந்தர், அவரது தோழர் நாகேஷிற்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம் என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.