ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மும்பை : ஐ.நா., சபையின், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு அமைப்பின் பிரதிநிதியாக, உலக அழகி பட்டம் பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த, நடிகை மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரஞ்ச் தி வோர்ல்டு என்ற, சர்வதேச அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதியாக, 2017ல் உலக அழகி பட்டம் வென்றவரும், நடிகையுமான மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, மனுஷி கூறியதாவது: உலகம் முழுதும், அனைத்து வயது பெண்களும் பல்வேறு வடிவங்களில் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஒரு பெண்ணாக, என்னால் அந்த வேதனையை உணர முடிகிறது. கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலானதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான உலகை கட்டி எழுப்பும் முயற்சிகளில், நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். அவர்களுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும். இதற்கு பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கான அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்றார்.
மனுஷி, பிரித்விராஜ் என்ற ஹிந்தி படத்தில், அக் ஷய் குமாருடன் நடித்து வருகிறார்.




