பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல பாலிவுட் நடிகர் சொஹைல்கான். இவரது சகோதரர் அர்பாஸ்கான் இவரும் நடிகர்தான். கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி இருவரும் துபாயில் இருந்து மும்பை திரும்பி உள்ளனர். அவர்களுடன் அர்பாஸ்கான் மகன் நிர்வாண் கானும் வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர்களை ஓட்டலில் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்தி விட்டு 3 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராக மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்து உள்ளனர்.
அரசு விதிகளை மீறல், நோய் பரவலுக்கு காரணமாதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் வரை அபராதமோ அல்லது 3 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.




