சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாங்கியுள்ள வீடு பற்றித்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.
ஆரயா பில்டிங் என்ற அபார்ட்மென்ட்டில் 14, 15 மற்றும் 16வது மாடிகளில் அமைந்துள்ள பிளாட்களை அவர் 39 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளாராம். பிளாட்டில்
கடந்த மாதம் 10ம் தேதி அந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளதாம். 78 லட்ச ரூபாய்க்கு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஜான்வி திரையுலகில் நடிகையாக அறிமுகமான பின் அவர் நடித்த நான்கு படங்கள் மட்டுமே இதுவரையில் வெளிவந்துள்ளது. அதற்குள் இவ்வளவு கோடிகளைக் கொடுத்து 'லக்சுரி அபார்ட்மென்ட்'களை வாங்கியுள்ளது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ரியல் எஸ்டேட் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி விஷயமாகும். அபார்ட்மென்ட்களே அங்கு பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும். சினிமா பிரபலங்கள் கூட தனி வீடுகளை வாங்காமல் அபார்ட்மென்ட்டுகளை மட்டுமே வாங்குவார்கள்.