தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணமடைந்தார். அப்போது சோசியல் மீடியாவில் பல வகையான செய்திகளை மீம்ஸ்ஸாக வெளியிட்டார்கள். இந்த நிலையில் அது குறித்து ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ''என்னுடைய தாயார் ஸ்ரீதேவி இறந்தபோதும் சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி பலதரப்பட்ட செய்திகள் மீம்ஸாக வெளியானது. அதையடுத்து நான் கூட என் தாயின் மரணம் குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை. அப்படி நான் வெளியிட்டால் அதை வைத்துக் கூட நான் விளம்பரம் தேட முயற்சிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரப்பி இருப்பார்கள். அதன் காரணமாகவே என் தாயார் குறித்து பேட்டிகளில் பேசுவதைக் கூட நான் தவிர்த்து வருகிறேன்.
எந்த விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுவதற்கு ரொம்ப பயமாக உள்ளது. இன்றைக்கு சோஷியல் மீடியாவில் அந்த அளவுக்கு ஆளாளுக்கு மீம்ஸ்களை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை வேதனை படுத்திக் கொண்டு வருகிறார்கள்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஜான்வி கபூர்.