மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! | ‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை டுவிட்டரில் 45 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்கின்றனர். அவரது இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகை ஜாஸ்மின் என்பவர் அமிதாப்பின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப், “டுவிட்டரும், ரசிகர் ஜாஸ்மினும் 45 மில்லியன் பாலோயர்கள் வந்திருப்பதற்கு இந்த புகைப்படம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. ஆனால், அதற்குமேலான நினைவுகள் இந்தப் புகைப்படத்தில் பொதிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்தில் சிக்கினார் அமிதாப். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பிற்கு மூன்றுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் கல்லீரல் நோய் அமிதாப்பிற்கு ஏற்பட்டது. இன்றளவும் அந்தப் பிரச்சினையால் உடல்நலப் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறார் அமிதாப்.
அப்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிய அமிதாப்பை பார்க்க வந்த அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அவரது காலில் விழுந்து அமிதாப் ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் ஜாஸ்மின் தற்போது பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.