இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை டுவிட்டரில் 45 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்கின்றனர். அவரது இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகை ஜாஸ்மின் என்பவர் அமிதாப்பின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப், “டுவிட்டரும், ரசிகர் ஜாஸ்மினும் 45 மில்லியன் பாலோயர்கள் வந்திருப்பதற்கு இந்த புகைப்படம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. ஆனால், அதற்குமேலான நினைவுகள் இந்தப் புகைப்படத்தில் பொதிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்தில் சிக்கினார் அமிதாப். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பிற்கு மூன்றுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் கல்லீரல் நோய் அமிதாப்பிற்கு ஏற்பட்டது. இன்றளவும் அந்தப் பிரச்சினையால் உடல்நலப் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறார் அமிதாப்.
அப்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிய அமிதாப்பை பார்க்க வந்த அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அவரது காலில் விழுந்து அமிதாப் ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் ஜாஸ்மின் தற்போது பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.