தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய தேர்தல் நடைபெற்றது. இந்த முறை முதன்முறையாக ஒரு பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக இயங்கிவந்த நடிகர் சங்க நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த பலர் குறிப்பாக சில முன்னணி நடிகைகள் சிலர் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்கள். அந்த வகையில் கடந்த 2017ல் தனக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்புக்கு நடிகர் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய நடிகை பாவனா நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்.
தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்வேதா மேனனிடம் அவரை மீண்டும் நடிகர் சங்கத்திற்கு அழைத்து வர முயற்சி எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்வேதா மேனன் அவர் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலிருந்து பல காரணங்களால் விலகிச் சென்ற அனைவரையுமே சங்கத்திற்கு மீண்டும் வரவேற்கிறோம். அவர்களை அழைத்து வர முயற்சிப்போம். ஆனால் அது ஒரே மீட்டிங்கில் முடியுமா என்பது சொல்ல முடியாது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மீட்டிங்குகள் நடத்திய பிறகு தான் தெரிய வரும். ஆனால் தற்போதைய முக்கிய அஜண்டா அதுவா என்றால் இல்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து நடிகை பாவனாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் நடிகர் சங்கத்தில் பல வருடமாக உறுப்பினராக இல்லை. அதனால் தற்போது நடிகர் சங்கத்தில் நடைபெற்ற மாற்றம் குறித்து எனக்கு தெரியவில்லை. சூழல் ஏற்பட்டால் அது குறித்து பேசுவேன்” என்று கூறியுள்ளார்.